R.Tharaniya / 2025 மே 13 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
1648: டில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1787: அவுஸ்திரேலியாவில் புதிய குடியேற்றமொன்றைஅமைப்பதற்காக இங்கிலாந்திலிருந்து குற்றவாளிக் கைதிகளைக் கொண்ட 11 கப்பல்களுடன் கப்டன் ஆர்தர் பிலிப் புறப்பட்டார்.
1846: மெக்ஸிகோ மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.
1912: பிரித்தானிய விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1917: போர்த்துக்கலில் பாத்திமா மாதா தமக்கு காட்சியளித்ததாக 3 சிறுமிகள் அறிவித்தனர்.
1939: அமெரிக்காவில் முதலாவது வர்த்தக எவ்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1940: பிரான்ஸை ஜேர்மனியப் படைகள் வெற்றிகொள்ளத் தொடங்கின.
1940: ஜேர்மனியின் படையெடுப்பின் காரணமாக நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா பிரட்டனுக்கு தப்பிச் சென்றார்.
1942: இந்திய நாடாளுமன்ற ராஜ்ய சபாவின் முதல் அமர்வு நடைபெற்றது.
1967: கலாநிதி ஸாகிர் ஹூஸைன் இந்தியாவின் 3 ஆவது ஜனாதிபதியானார். இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி இவராவார்.
1972: ஜப்பானின் ஒசாகா நகரில் மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயினால் 118 பேர் பலி.
1981: வத்திகானில் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் 20,000 மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் மீது துருக்கிய பிரஜையான மெஹ்மெட் அலி 4 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் பாப்பரசரின் வயிற்றிலும் கையிலும் காயமேற்பட்டது.
1996: பங்களாதேஷ் சூறாவளியில் 600பேர் பலி.
1997: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
1998: இந்தியா இரு நாள் இடைவெளியில் இரண்டாவது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியா மீது பொருளாதார தடை விதித்தன.
2005: உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 187பேர் கொல்லப்பட்டனர்.
2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை படுகொலை செய்யப்பட்டனர்.
2006: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி 5ஆவது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
2007: திருகோணமலை மொறவெவ பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரர் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
7 minute ago
15 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
24 minute ago
36 minute ago