R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
1939: அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான இசுக்குவாலசு, சோதனை ஓட்டத்தின் போது, நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.
1948: ஜெருசலேம் நகரில், அமெரிக்கத் தூதுவர் தோமஸ் வாசென் படுகொலை செய்யப்பட்டார்.
1949: மேற்கு ஜேர்மனி அமைக்கப்பட்டது.
1951: திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில், திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
1958: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1, தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1960: சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால், 61 பேர் உயிரிழந்தனர்.
1998: வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% பேர் ஏற்றுக்கொண்டனர்.
2006: அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலையான கிளீவ்லாந்து வெடித்தது.
2008: அனைத்துலக நீதிமன்றம் "நடுப் பாறைகள்" என்ற குன்றை மலேசியாவுக்கும் வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29 ஆண்டுகாலப் பிணக்கு தீர்க்கப்பட்டது.
35 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago