R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.
1946: ட்ரான்ஸ் ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.
1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.
1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.
1961: தசாப்தத்தின் இறுதிக்குள் அமெரிக்கர்கள் சந்திரனை அடைவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி சூளுரைத்தார்.
1963: ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 நாடுகள் ஒன்றிணைந்து ஆபிரிக்க ஐக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்தன.
1979: அமெரிக்க விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 271 பேர் பலி.
1981: பஹ்ரெய்ன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வளைகுடா கூட்டுறவு சபையை ஸ்தாபித்தன.
1985: பங்களாதேஷில் வீசிய சூறாவளியினால் சுமார் 10,000 பேர் பலி.
1997: சியாரா லியோன் ஜனாதிபதி டெஜான் கப்பா சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2001: அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான எரிக் வீஹென்மாயர் பார்வையற்ற முதல் நபரானார்.
2002: சீன விமானமொன்று தாய்வான் நீரிணையில் வீழ்ந்ததால் 225 பேர் பலி.
2002: மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197பேர் கொல்லப்பட்டனர்.
7 minute ago
15 minute ago
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
24 minute ago
36 minute ago