2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்​டோபர் 26

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 26 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

1905 : நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கிகரித்தது.

1909 : ஜப்பானின் பிரதமர் ஈட்டோ, ரொபூமி மஞ்சூரியா, கார்பின் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1917 : முதலாம் உலகப் போர் - இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.

1917 : முதலாம் உலகப் போர் - பிரேஸில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.

1936 : முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.

1942 : இரண்டாம் உலகப் போர் - சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1947 : சம்மு - காஸ்மீர் மகாராஜா இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.

1947 : ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.

1955 : ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாக தன்னை அறிவித்தது.

1956 : ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது.

1958 : பான் அமெரிக்கன் ஏர்வேய்ஸ் போயிங் 707 இன் முதலாவது வணிக ரீதியான பறப்பை நியூயோர்க் முதல் பாரிஸ் வரை மேற்கொண்டது.

1967 : முகம்மத் ரிசா ஷா பஹ்லவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.

1968 : சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு - நாள் பயணத்தை ஆரம்பித்தார்.

1977 : பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.

1979 : தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே - கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1984 – 'பேபி ஃபே' பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.

1985 : ஆஸ்திரேலிய அரசு ஊலூரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.

1994 : ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1994 : பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

1995 : இஸ்ரேல் - பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.

2000 : ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.

2001 : ஐக்கிய அமெரிக்கா 'அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை' நிறைவேற்றியது.

2002 : மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

2003 : கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

2015 : 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X