Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1906 : ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
1913 : மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமஸ் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில், 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.
1914: முதலாம் உலகப் போர் - கிறித்துமஸ் தினத்துக்காக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1924 : அல்பேனியா குடியரசாகியது.
1941 : இரண்டாம் உலகப் போர் - லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
1941 : இரண்டாம் உலகப் போர் - மலேஷியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
1951 : லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிஸ் லிபிய மன்னராக முடிசூடினார்.
1953 : நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் ரயில் மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், அதில் சென்று கொண்டிருந்த ரயில் ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
1966 : அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடா ஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 129 பேர் உயிரிழந்தனர்.
1968 : மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
1969 : வட கடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1974 : ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1999 : இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், டில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
2005 : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005 : டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில், 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.
2008 : உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago