Editorial / 2017 நவம்பர் 10 , மு.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
1659: இந்தியாவில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி பாஜ்பூரி படைத்தளபதி அப்ஸால் கானை, பிரதாப்கார் சமரின்போது கொன்றார்.
1847: அயர்லாந்துக்கு அருகில் ஸ்டீபன் வைட்னி எனும் கப்பல் மூழ்கியதால் அதிலிருந்த 100 பேரில் 92 பேர் பலியாகினர்.
1969: அமெரிக்காவில் தேசிய சிறுவர் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1971: கம்போடியாவில் கெமரூஜ் படையினர் பினோம்பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 9 விமானங்களை அழித்ததுடன் 44 பேரை கொன்றனர்.
1972: பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
1993: தவளை நடவடிக்கை 1993 - யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1995: நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999 - பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
2006: யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2008: செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.
11 minute ago
23 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
28 minute ago
36 minute ago