Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அமைக்கப்படவுள்ள பொதுக் கூட்டணியின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (30) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதோடு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவையே களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் நால்வர் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
39 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago