2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சக்கரத்தை பிட்டியம்பதி அம்பாள் இரதோற்சவம்

Mayu   / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சங்கரத்தை பிட்டியம்பதி அருள்மிகு வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இரதோற்சவத் திருவிழா, நேற்றைய தினம் மிக விமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று, உள்வீதியூடாக அம்பாள் வலம் வந்தார்.

விநாயகப் பெருமான் மற்றும் வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுடன் பத்திரகாளி அம்பாளும் தேரேறி, முத்தேர் பவனியாக வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பு.கஜிந்தன்

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .