Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜனவரி 24 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை வரை நான்கு சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதுடன் 59 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது என அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முகம்மது அலியார் செய்னுலாப்தீன் மற்றும் இஸ்மான்கண்டு முகம்மது றியாஸ் ஆகியோர் தலைமையிலான இரு சுயேட்சை குழுக்களும், பொத்துவில் பிரதேச சபைக்கு கலந்தர்லெப்;பை சக்கரியா தலைமையிலான சுயேட்சை குழுவும், நிந்தவூர் பிரதேச சபைக்கு சுலைமாலெப்பை முகம்மது சைபுல்லா தலைமையிலான சுயேட்சைக் குழுவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
சம்மாந்துறை பிரதேச சபைக்கு 10 சுயேட்சை குழுக்களும், பொத்துவில் பிரதேச சபைக்கு 07 சுயேட்சை குழுக்களும், இறக்காமம் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச சபைகளுக்கு 06 சுயேட்சை குழுக்களும், அக்கரைப்பற்று மாநகர சபை, மற்றும் நிந்தவூர் பிரதேச சபைக்கு 05 சுயேட்சைக் குழுக்களும், அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகளுக்கு 04 சுயேட்சை குழுக்களும், நாமல் ஓயா பிரதேச சபைக்கு 03 சுயேட்சை குழுக்களும், காரைதீவு, ஆலையடிவேம்பு, மகாஓயா மற்றும் உகன ஆகிய பிரதேச சபைகளுக்கு 02 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.
இம்மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, ஒரு நகர சபை உட்பட 17 பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதோடு, 19 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 182 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 359138 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
1 hours ago