Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 29 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 38 நபர்களுக்கு எதிராக, இன்று (29) சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலையச் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை, 14 நாட்களுக்குள் இவர்கள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில், இவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த நால்வருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் 613 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதில் 130 இடங்கள் நுளம்பு பெருகக் கூடிய இடங்களாக காணப்பட்டதாகவும், 4 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
18 minute ago
22 minute ago