Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்வத்தை கிராமத்திலுள்ள சுருப்போடை முந்தல் பாலம் மற்றும் வீதி புனர்நிர்மாணத்திற்காக உலக வங்கி கிழக்கு மாகாண வீதிஅபிவிருத்தி அமைச்சு மூலம் 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் அங்குரார்பண வைபவம் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனதுறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.புஷ்பராஜா, எஸ்.செல்வராஜா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வீதிக்கான பெயர் பலகை மற்றும் நினைவுக்கல் என்பன திரை நீக்கப்பட்டதுடன் பாலத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago