2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

106 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படல்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹனீக் அஹமட்

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் கடந்த ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 106 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார்.

இதில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் 47 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் - சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளிலேயே மிக அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு அடுத்ததாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 20 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 10 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்தபோதும், அம்பாறை கரையோர பிரதேசங்களில் இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்தினால் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • meenavan Wednesday, 13 February 2013 03:07 PM

    106 பேர் டெங்கு நோயாளர்கள் இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து வைத்துள்ள சுகாதார பணிப்பாளருக்கு அவரது பணிமனை ஆளுகைக்கு உட்பட்ட ஆசுபத்திரியில் வேலை செய்யும் வைத்திய அதிகாரி ஒருவரின் 6 வயது மகன் டெங்கு காய்ச்சலினால் கடந்த 5 ம் திகதி மரணமடைந்தது தெரியாமல் இருப்பது விந்தை தான்.

    Reply : 0       0

    saf Wednesday, 13 February 2013 05:01 PM

    கல்முனையில் டாக்டர் ஒருவரின் மகன் மரணித்தது டெங்கு நோயால்தானே, இதனை ஏன் மறைகிறார்கள்.

    Reply : 0       0

    nilam Wednesday, 13 February 2013 05:34 PM

    கல்முனையில் டெங்கு காய்ச்சலினால் சிறுவன் ஒருவன் நேற்று (04) மரணமடைந்துள்ளா்.

    கல்முனை குடி-14 புதிய வீதியியைச் சேர்ந்த டாக்டர் ஐ.எல்.ஜலால்டீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வா் ஆஷித் அஹமட் ( வயது-06 ) என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சலினால் மரணமடைந்தவராவார்.

    கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இச்சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
    கொழும்பு லேடி ரிச்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை இம் மரணம் சம்பவித்துள்ளதாக கல்முனை சுகாதார வைத்தியப் பிரிவினர் தெரிவித்தனர்.
    இது என்ன பகிடியா............

    Reply : 0       0

    azath Thursday, 14 February 2013 01:02 AM

    இந்த வருடம் கல்முனையில் வைத்தியரின் மகன் டென்கு நோயால் இறந்தது யேன் இன்னும் பதியவில்லை.........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X