Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை, இஸ்லாமாபாத் மக்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், கல்முனை மாநகரசபை மேயருடைய காரியாலயத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முழக்கம் அப்துல் மஜீட், கல்முனை மாநகரசபை மேயர் எஸ்.இஸ்ஸட்.எம்.மசூர் மொளலானா, பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் உட்பட உறுப்பினர்களும் கல்முனையின் மாநகரசபை ஆணையாளர் எம்.வை.சலிம், பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், இலங்கை மின்சாரசபையின் கல்முனை பிரதேச பொறியியளாலர் கே.எம்.உவைஸ், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் கல்முனை பிரதேச பொறியியலாளர் ஐ.எல்.எம்.ஜவாஹிர் மற்றும் இஸ்லாமாபாத் மக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
7 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago