Menaka Mookandi / 2011 ஜனவரி 04 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக கரையோரப் பிரதேசத்தின் பல பாகங்கள் நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு சிக்கள்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டுக்கான் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பித்த நிலையில் மாவட்டத்தில் நிலவும் வெள்ளம் காரணமாக பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபிக் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெலீல் கல்முனை வலயப் பாடசாலைகளை நேரில் பார்வையிட்டு அப்பாடசாலைகளை எதிர் வரும் 10ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி உத்தரவிட்டார்.


3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago