2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தி அதிகார சபையினருடன் மக்கள் முறுகல்

Super User   / 2011 ஜனவரி 30 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நிர்மாணித்து வரும் வடிகான்கள் நேராகவும், சரியாகவும் அமைக்கப்படாமை குறித்து நேற்று சனிக்கிழமை அப்பகுதி மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பொறியியலாளரிடம் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இதன்போது, பொதுமக்களுடன் பொறியியலாளர் தர்க்கித்ததையடுத்து அங்கு முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

மேற்படி வடிகான்களை அமைக்கும் பொருட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் பிரதான வீதியோரங்களில் அமைந்துள்ள கட்டிடங்களை உடைத்துத் தருமாறு – கட்டிட உரிமையாளர்களிடம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்திருந்தனர்.

இதற்கமைய சிலர் தமது கட்டிடங்களை உடைத்துக் கொடுக்க – வேறு சிலர் இதுவரையில் உடைத்துக் கொடுக்காமலுள்ளனர்.

இவ்வாறு உடைக்கப்படாத கட்டிடங்களை வைத்தவாறு – அக்கரைப்பற்றுக் காரியாலய  பொறியியலாளர் வடிகான்களை அமைத்து வருவதாகத் தெரிவித்தே பொதுமக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

வடிகான்கள் சரியாகவும், நேராகவும் அமைக்கப்படாமையினாலேயே அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பல பிரதேசங்களில் நீர் வடிந்தோடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .