2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீர்ப்பாசன வாய்க்கால்களை துப்பரவுபடுத்தும் பணி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை, சாய்ந்தமருது பிரதேச  செயலகப்  பிரிவிற்குட்பட்டதான  விவசாயக் காணிகளுக்கு  நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நீர் வழங்கும்  வாய்க்கால்களை துப்பரவு செய்யும் பணி இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட உடையாளம்பு நீர்ப்பாசன வாய்க்காலை துப்பரவுபடுத்தும் பணி இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.ஐ.எம்.சுஹைர் இப்றாஹிம் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட நீர்ப்பாசன வாய்க்கால்களை துப்பரவுபடுத்தும் பணி எதிர்வரும் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
'தியவரட அத்வல' எனும் நீர்ப்பாசன இரு வாரம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்தில்  சாய்ந்தமருது  உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், சாய்ந்தமருது பிரதேச கிராம சேவை உத்தியோகஸ்தர்கள்,  சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் விவசாய திணைக்கள ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • UMMPA Monday, 03 October 2011 08:44 PM

    என்ன நீங்களும் முயற்சி பன்னவேண்டாமா ! ஜப்பான் மாதரி ஒன்றுபட்டால் மட்டும் முன்னேறமுடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .