2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு சிரமதான நடவடிக்கை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் மாபெரும் சிரமதான பணி இன்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை 'கெப்சோ' அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்றது.

இச்சிரமதான பணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எம்.எஸ்.இப்றாம்லெப்பை, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.ரி.எம்.மர்சூக், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் கலாநிதி டாக்டர் எம்.இப்லால் சுபைர், ஜனாதிபதியின் கூட்டினைப்பு அதிகாரிகளான எம்.எம்.ஏ.காதர், எம்.ரி.ஏ.கரீம், நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், கெப்சோ அமைப்பின் பணிப்பாளர் ஜே.காமில் இம்றாட் உட்பட வைத்தியர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் , காரைதீவு இராணுவத்தினர், வைத்தியசாலை ஊழியர்கள், சம்மாந்துறைப் பொலிஸார், ஆட்டோ சாரதிகள் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க பிரதிநிதிகள் உட்பட சம்மாந்துறைப் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .