2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார அபிவிருத்திக்கான நுண்கடன் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராம விதவைகள் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களுக்கு வேல்ட்விஷன் நிறுவனத்தினால் வாழ்வாதார அபிவிருத்திக்கான நுண்கடன் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  வீரமுனை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவி எம்.சுசீலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகரும் ஆலோசகருமான நாவிதன்வெளி பிரதேச செயலக கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம், மாவட்ட லயன்ஸ் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சிறிவேல்ராஜ், கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் செயலாளர் எஸ்.சிறிரங்கன், எம்.கோகுலநாதன், கிராம உத்தியோகத்தர் கே.கேவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 60 குடும்பங்களுக்கு 1,438,000 ரூபா பணம் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .