Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சுமார் ஐம்பது வருட சட்டத்தரணி வாழ்வை பூர்த்தி செய்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கல்முனையில் இடம்பெற்றது.
இந்த பாராட்டு விழா கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை நீதிமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், நாடாளுன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஸ்ரீயானி, உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ.இமாம், கல்முனை மாவட்ட நீதிபதி இளஞ்செழியன், இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் அமீர் இஸ்மாயில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.றிஸ்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
meenavan Sunday, 16 October 2011 09:03 PM
நீதியமைச்சர் கலந்து வாழ்த்து தெரிவிக்கும் கல்முனையின் கறைபடியா காவலன் மதிப்புக்குரிய மன்சூர் அவர்களினது பாராட்டு நிகழ்வில் ஊர் எம்.பி. கலந்து கொள்ளாமைக்கு, நீதியமைச்சரை விட வேலை பளு கூடியது காரணமோ?
Reply : 0 0
ziyad Sunday, 16 October 2011 10:31 PM
காலம் கடந்த ஞானம் .....
Reply : 0 0
saniyan Monday, 17 October 2011 02:58 AM
இவர் இப்போ முக்கியம் இல்லை, பாவம் மனிதர்.
Reply : 0 0
maagim Monday, 17 October 2011 03:21 AM
Those days SLMC started for negligence of mansoor's public services.
But this party celebrating his 50s. I thing this party has no good sailor.
Reply : 0 0
kalmunai kaleel Monday, 17 October 2011 11:42 AM
அமைச்சர் மன்சூரின் அரசியல் வாழ்வு முடிந்ததோடு கல்முனையின் அபிவிருத்தியும் முடிவடைந்தது என்றே கூறலாம். கல்முனை நவீன சந்தை, புத்தக சாலை, கச்சேரி, நீதிமன்றம், பஸ் வண்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பாடசாலை கட்டிடங்கள், வீட்டு திட்டங்கள் என கல்முனைக்கு பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டவர் இவர். சட்டதுறையினர் மாத்திரம் பாராட்டு விழா எடுத்தால் போதாது. கல்முனை பிரதேச மக்கள் சேர்ந்து இவருக்கு இவர் ஆற்றிய சேவைகளுக்கு பாராட்டு விழா எடுத்தால் சிறப்பாக இருக்கும்.
Reply : 0 0
suddi Monday, 17 October 2011 04:33 PM
ஐயா ஜியாத்! 50 வருடகாலத்தை கடத்தினார் என்பதற்கு தானே பாராட்டு நிகழ்வு! அதை விடுத்து 10 ,20 வருட சட்டத்தரணி வாழ்வுக்கெல்லாம் பாராட்டு நிகழ்வு எடுக்க வேண்டும் என்கிறீர்களோ? அப்படியானால் எத்தனை பேருக்கு அப்படி பாராட்டு நிகழ்வு எடுக்க வேண்டுமோ தெரியவில்லை. நீதி அமைச்சரைதான் கேட்க வேண்டும்.
Reply : 0 0
kalmunaiyan Monday, 17 October 2011 08:15 PM
மகனிற்கு உழைக்க வந்துள்ளார்
Reply : 0 0
ziyath Monday, 17 October 2011 09:15 PM
இனி கல்முனையின் தலைவர் நிஜாம் என்பதை அடுத்த தேர்தலில் காண்பிப்போம் ........
Reply : 0 0
kalmunaiyan Tuesday, 18 October 2011 01:16 AM
இவர் எப்போ நீதிமன்றம் சென்றார்.
Reply : 0 0
ghaani Tuesday, 18 October 2011 11:27 AM
நீதிமன்றம் சென்ற காலத்தை விட இவர் பாராளுமன்றம் சென்ற காலம் அதிகமாக இருக்கலாம். கல்முனைக்கு இவர் ஆற்றிய சேவைகளை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அப்படி மறுத்தோமானால் நன்றி மறந்தவர்கள் ஆவோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago