2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆலோசனை சபை முன்னோடிக் கூட்டம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களின் பங்கேற்;பையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனை சபை முன்னோடிக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மாநகர சபையின் விசேட ஆணையாளரும், பிரதேச செயலாளருமாகிய எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர சபையும் கணக்காளர் எல்.ஜி. சாலித்தீன், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அலாப்தீன், ஆசிய மன்ற அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், மத நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்   தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான பிரேரணைகளும்  கருத்துக்களும் சபையிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது. இதேவேளை, மாநகர சபைக்கான வரி அறவீடுகள் தொடர்பாகவும் ஆரயப்பட்டது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .