2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அல் - அக்ஷா வித்தியாலயத்திற்கு இன்றும் மாணவர்கள் செல்லவில்லை

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


மாணவர்கள் சமூகமளிக்காமை காரணமாக இன்றைய தினமும் பொத்துவில் சின்ன உல்லை அல் - அக்ஷா வித்தியாலயத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.

தமது பாடசாலையிலிருந்து இடமாற்றப்பட்ட 15 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு கோரி பாடசாலை சமூகத்தினர் கடந்த வியாழக்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதோடு, தமது கோரிக்கை நிறைவேற்றுப்படும் வரையில் - பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.

பெற்றோர்களின் மேற்படி தீர்மானத்துக்கமைய அல்-அக்ஷா வித்தியாலயத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. ஆயினும், வழமைபோல் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் அறுகம்பை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புலானாய்வுப் பிரிவினர் - பாடசாலை அதிபரைச் சந்தித்து, மாணவர்கள் சமூகமளிக்காமைக்கான கேட்டறிந்து கொண்டதாக அறிய முடிகிறது.


  Comments - 0

  • nowshar Tuesday, 26 February 2013 02:26 PM

    Masha Allah inru pottuvil vlayathukku vrukai thantha ZDE anaithu padasalaikalukkum senru ankiruntha melathika aasiriyarkalil 3 perai udanadiyaka enkalathu padasalaikalukku niyamanam seithar matrum nalai allathu nalai maru thinam innum 2 aasiriyarkal tharuvathahavum eanaiya aasiriyarkalai pattatharikal niyamanathil poorthi seithu tharuvathahavum vakkuruthi alithar .

    thanks mabrook bro .....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X