2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அக்கரைப்பற்றில் ஒருவர் வெட்டிக்கொலை

Kanagaraj   / 2013 மார்ச் 02 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

அக்கரைப்பற்றில் ஒருவர் இன்று சனிக்கிழமை மாலை வெட்டிக்கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளப்பாதுகாப்பு வீதியிலேயே இந்தச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட குரோதமே இந்த கொலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலியானவரின் சடலம் அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் அக்கரைப்பற்று 6ம் பிரிவு வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரான முகமட் முஸ்தப்பா பகாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தலைமறைவாகியுள்ளவர் அதே வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய பசீர் என்றழைக்கப்படும் ஆப்தீன் தஸ்லீன் எனவும் தெரிவித்த பொலிஸார் சந்தேகநபரை தேடிவருவதாக  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X