2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வேட்டையாட முற்பட்ட எழுவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், வட்டமடு மேச்சல்தரை பிரதேசத்தில் வேட்டையாட முற்பட்டதாகக் கூறப்படும் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி ஒன்றும் 9 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்படி 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி மற்றும் 9 தோட்டாக்களுடனும் சந்தேக நபர்கள் 7 பேரும்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேரையும் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .