2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தனித்துவத்திற்காகவே கிழக்கை பிரிக்கக் கோரினோம்: அதாவுல்லா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


'கிழக்கு மாகாணம் தனித்துவமாக இயங்கவேண்டும் என்பதற்காகவே கிழக்கைப் பிரிக்கக்கோரினோம்' என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பணிமனையின் திறப்பு விழா திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணத்தை யாரும் செதுக்கத் தேவையில்லை. இம்மாகாணம் இயற்கையாகவே அழகானது. அழகு நிறைந்த இந்த மாகாணம் அதற்குரிய கலை, கலாசார, பாரம்பரிய விழும்பியங்களுடன் தனித்துவமாக இயங்க வேண்டும். இம்மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் அவரவர் கலாசார விழும்பியங்களை; சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும். அதனாலேயே, கிழக்கை பிரிக்கக் கோரினோம்.

யதார்த்தங்களை நிலைநிறுத்துவதற்காக குரல்கொடுத்த எங்களைப் பார்த்து இனவாதிகள் என்று சிலர் வசைபாடினர். அத்தகையவர்கள் யதார்த்தத்தின் உண்மைநிலையைப் புரிந்துகொண்டு மௌனமாகிவிட்டார்கள்.

திருகோணமலை மாவட்டம் பொருளாதார வளம் நிறைந்தது. பொருளாதார விருத்திக்கு கிழக்கின் தலைசிறந்த மாவட்டமாக திருகோணமலை உள்ளது. இருப்பினும், நிர்வாகத்துக்கான மாவட்டமாக மட்டக்களப்பும் உருவாக வேண்டும்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதிய நிதியிருக்கவில்லை. பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்கு இம்மாகாணம் முகம்கொடுத்தது. இன்று அவ்வாறு இல்லை. ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா, கொய்க்கா போன்ற நிதி உதவி வழங்கும் நிறுவனங்களினூடாக அபிவிருத்திக்காக நிதி கிடைக்கப்பெறுகிறது.

அதனால் இம்மாகாணத்தை இந்நாட்டின் சிறந்த மாகாணமாக கட்டியெழுப்புவதற்கு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசியல் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் ஒன்றிணைந்து செயற்படும்போதுதான் இந்த மாகாணத்தினதும் மக்களினதும் இலக்குகளை அடைய முடியும்.

ஒரு நாட்டினதோ அல்லது பிரதேசத்தினதோ மக்களினது விருத்திக்கு அவசியமானது சிறந்த வீதிக் கட்டமைப்பாகும். பெருளாதாரத்தின் முதுகெழும்பான போக்குவரத்துக்காக இன்று நாட்டின் பல பாகங்களிலும் பெருந்தெருக்கள் அமைக்கப்படுகின்றன.

அந்தவைகயில், தனக்குக்கிடைத்த வீதி அபிவிருத்தி அமைச்சுப் பதவியினூடாக அமைச்சர் உதுமாலெப்பை பல வீதிகளை நிர்மாணித்துள்ளார். தான் பெற்றுக்கொண்ட பொறுப்பை எப்பாடுபட்டேனும் செய்து முடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்படும் அமைச்சர் உதுமாலெப்பையின் பணிகள் பராட்டத்தக்கது' என்றார்.




  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 29 October 2013 06:41 AM

    கண்டியில் உள்ளவர்களுக்கு கிழக்கை பிரித்தால் என்ன? இணைத்தால்தான் என்ன? தேர்தல் வரும்போது வருவோம், நாரே தக்பீர் சொல்லுவோம், வெல்லுவோம் மீண்டும் சென்று விடுவோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .