2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நிந்தவூரில் இருவர் மீது வாள்வெட்டு

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா.சரவணன்

நிந்தவூர் பிரதேசத்தில் இருவர் மீது இனந்தெரியாதேரினால் நேற்று புதன்கிழமை இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிந்தவூர், மீரா நகர் பிரதேசத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர் மீது பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாக கூறி வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் கூக்குரலிட்டமையினால் அந்த வீட்டினை நோக்கி அயவர்கள் சென்றுள்ளனர்.

இதனால் தாக்குதல் மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .