2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்'

Princiya Dixci   / 2015 ஜூலை 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில் 

எமது இதயம்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். இந்த இதயத்தை இயங்கச் செய்வதும், நிறுத்திவிடுவதும் நமது ஒவ்வொருவரின் கைகளில்தான் உள்ளது. இதனை சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர், நேற்று சனிக்கிழமை (25)  தெரிவித்தார்.

ஒலுவிலில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் தலைமை எம்முடன் இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 

சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநல அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டு எமது கட்சிக்கெதிராகவும் சமூகத்துக்கெதிராகவும் பல சதித்திட்டங்களைத்தீட்டி செயற்பட்டு வருகின்றனர்.

இதனை நாம் முறியடித்து எமது கட்சியின் வெற்றியை பலப்படுத்தி இவ்வாறானவர்களை விரட்டியக்க அனைவரும் எமது கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .