2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும்: முபாறக்

Princiya Dixci   / 2015 ஜூலை 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முகாமைத்துவ உதவியாளர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும் என அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக், இன்று ஞாயிற்றுக்கிழமை (26) தெரிவித்தார்.

முகாமைத்துவ உதவியாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

40,000 புதிய  அரச முகாமைத்துவ உதவியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு முகாமைத்துவ உதவியாளர் சேவையிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளமையானது வரவேற்கத்தக்கதாகும். இதன்மூலம் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை மகிழ்ச்சிகரமானதுமாகும். 

இந்நியமனங்களை வழங்குவது போன்று முகாமைத்துவ உதவியாளர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கும் அவர்கள் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .