Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 26 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
மக்கள் தந்த ஆணையால்தான் கடந்த காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உதவி தவிசாளராக இருந்து வந்தேன். அதேபோல் நீங்கள் இன்று ஆணை தந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராகவும் இருக்கின்றேன் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் எ.எல்.அமானுல்லா, இன்று ஞாயிற்றக்கிழமை (26) தெரிவித்தார்.
ஒலுவிலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நான் பதவி ஆசை கொண்டவனல்ல. மத்திய குழுவின் செயற்பாட்டினால் ஓலுவில் பிரதேசம் பல நஷ்டங்களை எதிர்கொண்டுள்ளது.
கடந்த மாதம் நீர் வளங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட நியமன விடயத்தில் ஒலுவில் மத்திய குழுவினர் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் பல தொழில் வாய்ப்புக்களை பெற்றிருந்திருக்கலாம். அவர்கள் அசமந்தப்போக்கில் செயற்பட்டதால் ஒலுவில் பிரதேசம் 3 பேருக்கான நியமனங்களையே பெற்றது. அதுவும் எனது முயற்சியினாலேயே கிடைக்கப்பெற்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago