2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அதிபர், ஆசிரியர் விடுதியை புனரமைக்குமாறு விசனம்

Thipaan   / 2015 ஜூலை 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மிகவும் கஸ்டப் பிரதேச பாடசாலையான அக்-அம்பலத்தாறு சேகுசிக்கந்தர் ஒலியுல்லா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர் விடுதி தீப்பற்றி எரிந்து சேதமடைந்த நிலையில் பலவருடங்களாக கவனிப்பாரற்று காணப்படுவதாக பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கும் அறிவித்தும் அவர் அதனை பார்வையிட்டு பல வருடங்கள் கடந்தும் இன்னும் புனரமைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, விடுதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பெற்றோரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .