2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் மீண்டும் மழை; வெள்ள அபாயம்; காய்ச்சல் தீவீரம்

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தணிந்திருந்த அடைமழை மீண்டும் இன்று (09) காலை முதல் ஆரம்பித்துள்ளது.

அதனால் மீண்டும் தாழிநிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீதிகளிலும் வெள்ளம் தேங்கிநிற்கிறது.

மாவட்டத்தின் காரைதீவு, ஆலையடிவேம்பு, திருக்கோவில், அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில் ஏற்கெனவே வந்த வெள்ளம் இன்னும் வற்றாத நிலையில், மீண்டும் மழை ஆரம்பித்திருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் இத்தொடர்மழை காரணமாக, ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும்  சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் ஒருவர் உயிரிழந்துள்ளாரெனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X