Suganthini Ratnam / 2017 ஜூன் 26 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில், ஆத்திமுனை கஷ்டப் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், நேற்றுத் தெரிவித்தார்.
பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தால் மகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்படி பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல்வாதிகளின் கண்களில் படாத ஆத்திமுனைப் பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகளை முதற்கட்டமாக தான் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமு; எனவும் அவர் கூறினார்.
11 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026