2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஆயுர்வேத மருந்தகத்தின் பரிசளிப்பு விழா

Freelancer   / 2023 மே 12 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் பரிசளிப்பு விழா, இ.கி.மி.பெண்கள் பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை (11) நடைபெற்றது.

காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தக வைத்திய பொறுப்பு அதிகாரி டொக்டர் எம். சி எம். காலிட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை  பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.பி .அப்துல் வாஜித் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக  காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், கோட்டக்கல்வி பணிப்பாளர் ஜே.டேவிட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

"இயற்கையோடு இணைந்து வாழ்வோம்" என்று விழிப்புணர்வு கருத்தரங்கும்," மருத்துவ தாவரங்கள்" வினா - விடை போட்டியில் வெற்றி பெற்ற காரைதீவு கோட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பும் இதன்போது நடைபெற்றன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .