2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆற்று மண் ஏற்றிய ஐவர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை,சம்மாந்துறை முறிகண்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அதற்கு பயன்படுத்திய ஐந்து மாட்டு வண்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நிந்தவூர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய நபர் ஒருவரும் சிறிய ரக லொறியொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .