Suganthini Ratnam / 2017 ஜூன் 18 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி கிராமத்தில் சனிக்கிழமை (17) இரவு இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில், அந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
மாணிக்கப் பிள்ளையார் முன்வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து சகோதரியுடன் காயத்திரி கிராமத்தில் மரண வீட்டுக்குச் சென்றபோதே, அங்கு இந்த இளைஞர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோவில் முதலாம் குறிச்சியைச் சேர்ந்த யோ.வதனராஜ் (வயது 22) என்ற இளைஞரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞரின் முகம், கை மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்கள் காணப்படுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
10 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026