2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிகரட் வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஒலுவில் துறைமுக எல்லைப் பிரதேசத்தில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட 40 கோல் சீல் ரக சிகரட் மற்றும் ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (07) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி முன்னிலையில் ஆஜர்செய்தபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X