2025 மே 02, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 மார்ச் 01 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில், அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணல் ஏற்றப் பயன்படுத்திய பெரிய ரக லொறியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், விசேட அதிரடிப்படையினரால் இன்று புதன்கிழமை (01) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .