2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கைகோர்க்கவும்’

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், ரு.அனிதா

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கேட்டுள்ளார்.

கல்முனையில்  இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்று, நேற்று (24) மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற போதே, மேற்கண்டவாறு  அவர் கூறினார்.

இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடளாவிய ரீதியில் நாளை (26) நடைபெறவுள்ள சுகவீன லீவுப் போட்டத்திலும்  அன்றைய தினம் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உரிமைப் போராட்டம் ஆகியன குறித்து இவ்வூடக மாநாட்டை நடத்தியுள்ளோம்.

“சம்பள முரண்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் கூட்டிணைந்த தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

“கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடப்பெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை.

“ஆசிரியர் சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை நாம் அங்கிகரிக்க முடியாது. இதனை சகல தரப்பினருக்கும் கற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பமாக இப்போராட்டம் அமைய, அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X