2025 மே 12, திங்கட்கிழமை

‘சாரா’ தொடர்பில் அச்சுறுத்தல் வழக்கு; தேவைப்பட்டாலே அழைப்பாணை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து, இடம்பெற்ற சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறப்படும் ‘சாரா’ என்ற புலஸ்தினி, உயிருடன் உள்ளார் எனவும் அவரை, தான் கண்டதாகவும் தகவல் வழங்கிய நபருக்கு, இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக, கல்முனை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து,  தேவை ஏற்படின் அழைப்பு விடுக்கப்படுமென, கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்த வழக்கு, கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் நேற்று (19) எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன்போது, கடந்த தவணையில், தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்து, வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராகவில்லை. அவர் சார்பாக, சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். 

இந்நிலையில், விசாரணைகளை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் தவணைகளில் வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராகத் தேவையில்லை எனவும், தேவை ஏற்படின் அழைப்பாணை விடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, நவம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

இது தவிர, இந்த வழக்குக்காக ஆஜராகிய சட்டத்தரணியைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய நபரை அடையாளம் காண்பதற்காக, தனியார் தொலைபேசி நிறுவனத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுடன், இவ்விடயம் தொடர்பான வழக்கு, நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X