ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“காலாகாலமாக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திருக்கோவில் பிரதேசம், தற்பொது சோபை இழந்து காணப்படுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று (19) மேலும் தெரிவித்ததாவது,
“யுத்தத்தினாலும் அனர்த்தங்களிலும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு, சம்மாந்துறை பிரதேச சபைகளைத் த.தே.கூ இழந்து நிற்கின்ற நிலைமை பெரிதும் கவலைக்குரியது.
“வேட்புமனுக்களைக் கூட முறையாகப் பூர்த்தி செய்ய முடியாதவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, சமூகத்தை வழிநடத்த முடியுமென்பதை கேட்க விரும்புகின்றேன்.
“தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இருந்தவர்களும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும், தமிழ் மக்களுடைய ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமை கட்சியை பலவீனப்படுத்தும் என்பதில் ஐயமில்லை” என்றார்.
20 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago