2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Niroshini   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் செல்வவெளி வயல் பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் 10ஆம் பிரிவைச் சேர்ந்த  36 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .