2025 மே 03, சனிக்கிழமை

நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி, நேற்று (16) சத்தியப்பிரமாணம் செய்துள்ளாரென, தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இவர் போட்டியிட்டார். 
வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தீர்மானித்து இருந்தது. அதற்கமைவாகவே, இவர் நியமிக்கப்பட்டுள்ளாரெனவும் தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X