Editorial / 2018 ஜூன் 01 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா
சா்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டி, "புகைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியொன்று அக்கரைப்பற்றில் இன்று (01) இடம்பெற்றது.
ஜும்மா தொழுகையை தொடர்ந்து, குறித்த விழிப்புணர்வுப் பேரணியானது, பட்டினப்பள்ளிவாயல் முன்னால் ஆரம்பமாகி, மாநகர சபை வரை சென்று மாநகர மேயா் அதாஉல்லா அகமட் ஸக்கியடம், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள், பீடி சிகரெட் உட்பட அனைத்து வகையான போதைப்பொருட்களையும் முற்றாக தடை செய்யவேண்டும் என, குறித்த மகஜரில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026