Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
சுனாமியில் காணாமல் போன மகனுக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் வழக்கு, சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் நேற்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், வழக்கு ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு ஒக்கப்பட்டுள்ளது.
மகனுக்காக ஏங்கும் இரு தாய்மார்களும் நீதிமன்றத்துக்கு வருகை தந்ததுடன் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனையை (DNA) நேற்று (08) மேற்கொள்வதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மரபணு பரிசோதனை தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்த சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி, வழக்கை ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
11 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
19 minute ago