2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர் கற்கை வள நிலையங்கள் திறந்து வைப்பு

Janu   / 2023 மே 30 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில்  திருக்கோவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் உகன ஆகிய ஐந்து பிரதேசங்களில் தலா 5 பாடசாலைகளில் மாணவர் கற்கை வள நிலையங்கள்  திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

SWOAD நிறுவனத்தினால் GCERF மற்றும் கெல்விற்றாஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற EMPOWER செயற்திட்டத்தின் கீழ் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்கள் மீளெழும் திறனை கட்டியெழுப்பும் நோக்கில்  இது நடைமுறைப் படுத்தப்படுகிறது. 

இங்கு கணினி ,பிறின்ரர், தளபாடங்கள், நவீன மாணவர் கதிரைகள், புத்தகங்கள், அலுமாரி முதலான பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 சுவாட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் க.பிறேமலதனின் வழிகாட்டலில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட  கோரக்களப்பு சக்தி வித்தியாலயத்தில் மாணவர்கள் கற்கை வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் வி.விமலேஸ்வரன்  தலைமையில்  நடாத்தப்பட்டது.

வி.ரி.சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .