2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளி பெண்ணை காணவில்லை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை-04 ஹாஜியார் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்னை, கடந்த 08 நாட்களாக காணவில்லை என்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளியான ஏ.ஐ. பாத்திமா சம்ஹா என்ற இப்பெண் 23 வயதுடையவர் என்றும் இவர் கடந்த 10.09.2022 திகதி வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவரை கண்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 0652257709 என்ற இலக்கத்துக்கோ அல்லது அவரது குடும்பத்தாரின் இலக்கமான 0773727293 என்ற இலக்கத்துக்கோ தொடர்பை ஏற்படுத்துமாறு, பொதுமக்களின் உதவியை குடும்பத்தார் நாடி நிற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .