2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்சாரம் தடைப்படும்

Editorial   / 2021 நவம்பர் 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்

அவசர திருத்த வேலை காரணமாக, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி, நகர் பள்ளி, வைத்தியசாலை, டெலிகொம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

சனிக்கிழமை (13) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படும்.

திங்கட்கிழமை (15) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை மற்றும் கோணாவத்தை ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (16) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதி, கல்லரைச்சல், மலையடிக்கிராமம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .