2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக சேதம்

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மணல்சேனை பகுதியில், பொன்னுத்துறை ஜெகநான் என்பவரது வீடு, இன்று (15) அதிகாலை மின்னல் தாக்கியதில் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

விவசாய வேலையின் பொருட்டு, அதிகாலை வேளையில் எழுந்து முற்றத்தில் நின்று கொண்டிருந்த வேளை பாரிய வெளிச்சத்துடன் சத்தம் கேட்ட போது, வீட்டுக் கூரை சிதறியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவத்தை அறிந்து குறித்த இடத்துக்கு பொத்துவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தருமராஜா சுபோதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X