Princiya Dixci / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு
வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென வலியுறுத்தும் 100 நாட்கள் செயல் முனையின் ஊடாக திருக்கோவில் - விநாயகபுரம் கடற்கரையிலும் மக்கள் வானில் பட்டம் விட்டு கோரிகை விடுத்தனர்.
இப் பட்டம் விடும் கவனயீர்ப்பை, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய -மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்பை நடத்தி இருந்தன.
2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025