2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விநாயகபுரம் கடற்கரையிலும் பட்டம் விட்டு கோரிக்கை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டுமென வலியுறுத்தும் 100 நாட்கள் செயல் முனையின் ஊடாக திருக்கோவில் - விநாயகபுரம் கடற்கரையிலும் மக்கள் வானில் பட்டம் விட்டு கோரிகை விடுத்தனர்.

இப் பட்டம் விடும் கவனயீர்ப்பை, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

வடக்கு, கிழக்கு வாழ் பொதுமக்கள், கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய -மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்பை நடத்தி இருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .