Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜனவரி 07 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் செயற்படும் சில நுண் நிதி நிறுவனங்கள் புற்றுநோயாக மாறியுள்ளது. அந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல், இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். பலரும் உயிரைக் கொடுத்தும் இழப்பீடு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தாம் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், நுண் நிதி நிறுவனங்களின் உதவியை நாடுகின்றனர், அடுத்ததாக 'சுனாமி'யை எதிர்கொள்கின்றனர். கையில் இருக்கும் கரண்டியை அடித்து ஆற்றில் கடலில் குதிக்கும் சூழ்நிலையில் உள்ளனர். இதன்மூலம் நுண்நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமையால் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது மிகவும் கடினம்.
இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சுமார் 10,000 நுண்கடன் நிறுவனங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு சேவை செய்கின்றன. நிதி நிறுவனம் வைப்புகளை ஏற்றுக்கொள்கிறது மற்றும் சிறிய அளவிலான வணிகங்களுக்கு நியாயமான வட்டியில் கடன்களை வழங்குகிறது. ஆனால், முறையாக சட்டப்பூர்வமாக்கப்பட்ட நிறுவனத்தைப் போல் அல்லாமல், காளான் போல வளர்ந்துள்ள பல மோசடி நுண்கடன் நிறுவனங்கள், செலுத்த முடியாத அளவுக்குக் கடன்களைக் கொடுத்து, கடன் வாங்கியவர்களைக் கடுமையாக ஒடுக்குகின்றன. அவர்களிடம் ஏதேனும் சொத்து இருந்தால், அது அவர்களின் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படுகிறது. தவிர்க்க முடியாத விளைவு என்னவென்றால், கடன்பட்ட ஏழைகள் மேலும் மூழ்கிவிடுவார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. போரின் விளைவாக, அந்த இரண்டு மாகாணங்களும் மற்ற மாகாணங்களை விட ஒப்பீட்டளவில் வறுமையால் பாதிக்கப்பட்டன. வாழ்க்கைச் செலவு அதிகம் என்பதாலும், வர்த்தக வலையமைப்பை விரிவுபடுத்த வேண்டியதாலும் இம்மாகாண மக்கள் கடன் வாங்குவதற்கு ஆசைப்படுகின்றனர். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செல்வதை விட நுண் நிதி நிறுவனங்களே அவர்களின் தெரிவு என அந்த இரண்டு மாகாணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த கடனை முதலீட்டை விட நுகர்வுக்கு பயன்படுத்துவதால், அவர்கள் சிக்கலில் சிக்குகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நுண் நிதி நிறுவனங்களை விரைவில் ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பெரும் அனர்த்தத்தைத் தடுக்கும் என்றே கூற வேண்டும்.
2025.01.07
38 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
1 hours ago