Janu / 2026 மார்ச் 04 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியமானது எண்ணெய் வளம், புவிசார் மூலோபாய இடங்கள் மற்றும் மத-அரசியல் செல்வாக்குகள் ஒன்றிணையும் உலகின் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான பிராந்தியங்களில் ஒன்று என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இன்று நிகழும் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் இந்த நீண்ட வரலாற்றின் மற்றுமொரு அத்தியாயம் மட்டுமே.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அதிகார சமநிலையை மாற்றியமைத்துள்ளன என்பது அரசியல் கருத்துக்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பிராந்திய அதிகார உறவுகளை நேரடியாகப் பயன்படுத்தி, போர், பொருளாதார அழுத்தம் மற்றும் அரசியல் தடைகள் மூலம் அதிகாரப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
ஈரானின் உயர்மட்டத் தலைமை மீதான தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. தலைமைத்துவ வெற்றிடமானது பொதுவாக உள்நாட்டு ஸ்திரமின்மை, அதிகாரப் போட்டி மற்றும் பதில் தாக்குதல்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. இத்தகைய சூழல் பிராந்தியத்தில் புதிய கூட்டணிகள் மற்றும் எதிர்ப்புகள் உருவாக வழிவகுக்கிறது.
இந்த மோதலின் அடிப்படை அடித்தளத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீதான செல்வாக்கு முதன்மையாக உள்ளது. உலக எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பிராந்தியத்தின் மீது பெரும் வல்லரசுகளின் மூலோபாயக் கவனம் திரும்புவது ஒன்றும் தற்செயலானது அல்ல. எரிசக்தி வழித்தடங்களைக் கட்டுப்படுத்துவது என்பது பொருளாதார அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகும்; பொருளாதார அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அரசியல் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.
அமெரிக்காவின் தலையீடுகள் குறித்த விமர்சனங்கள் பெரும்பாலும் 'உலக போலீஸ்காரர்' என்ற கருத்துடன் தொடர்புடையவை. அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பாதுகாப்பதன் பெயரில் செயல்பட்டாலும், அது பெரும்பாலும் அதிகாரக் காட்சியாவே பார்க்கப்படுகிறது. வரலாற்றில் ஈராக் - குவைத் போர், ஆப்கானிஸ்தான் மீதான தலையீடு போன்ற சம்பவங்கள் இந்த விமர்சனங்களை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளாக உள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரமின்மை உலகப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் பாதைகள் அடைப்பு மற்றும் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இத்தகைய பாதிப்புகளுக்கு மிகவும் உள்ளாகின்றன. இந்த நடவடிக்கைகள் இலங்கை போன்ற நாடுகளை மிக நேரடியாகப் பாதிக்கின்றன.
04.03.2026\

17 minute ago
18 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
32 minute ago
47 minute ago